பராபவ ஆண்டு, வைகாசி-2 (சனிக்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : அமாவாசை பின்னிரவு 2.09 வரை பிறகு பிரதமை
நட்சத்திரம் : பரணி மாலை 5.34 வரை பிறகு கார்த்திகை
யோகம் : சித்த/அமிர்தயோகம்
ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம் : கிழக்கு
நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
சர்வ அமாவாசை. கார்த்திகை விரதம். திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் சிறப்பு அபிஷேகம், திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் விடாயாற்று. திருப்போரூர் ஸ்ரீ முருகப் பெருமான் பால் அபிஷேகம். காரைக்குடி ஸ்ரீ கொப்புடையம்மன் வெள்ளிக் கேடயத்தில் பவனி. நயினார் கோவில் ஸ்ரீ சௌந்தரநாயகி அம்மன், திருவாடானை ஸ்ரீ சிநேகவல்லியம்மன் தலங்களில் அபிஷேகம். ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு.
திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள், மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் தலங்களில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சனம், உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சனம். திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி, திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் தலங்களில் திருமஞ்சனம். ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள், திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீரராகவப் பெருமாள், மதுரை ஸ்ரீ கூடலழகர் பெருமாள் தலங்களில் திருமஞ்சனம். திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் திருமஞ்சனம். திருக்கண்ணபுரம் ஸ்ரீ சௌரிராஜப் பெருமாள் ஸ்ரீ விபீஷணாழ்வாருக்கு நடையழகு சேவை காண்பித்தருளல்.
மேஷம் - நலம்
ரிஷபம் - நட்பு
மிதுனம் - உதவி
கடகம் - சுகம்
சிம்மம் - வரவு
கன்னி - நற்செயல்
துலாம் - ஊக்கம்
விருச்சிகம் - திறமை
தனுசு - பணிவு
மகரம் - அன்பு
கும்பம் - ஆதரவு
மீனம் - நிம்மதி