உண்ணும் உணவினால் மனிதனுடைய குணங்கள் மூன்று வகையாக மாற்றம் அடைகின்றது. அவை சாத்வீக குணம், ராஸஜ குணம், தாமஸ குணம் ஆகியவை.
சாத்வீக குணம்
தாவர உணவுகளான கீரை, பச்சை காய்கறிகள், பழங்கள் மட்டும் உண்பவருக்கு சாத்வீக குணம் உண்டாகும். அதாவது தன்னை உணர்ந்து அதிக விவகாரமான தவறுகளை செய்யாமல் மனசாட்சிபடி வாழ்வார்கள். பிறருக்கு நன்மை தரும் தானம், தர்மம் செய்பவர்களாக இருப்பார்கள்.
ராஸஜ குணம்
பால், தயிர், நெய், கிழங்கு வகைகள், பருப்பு வகைகள், பூண்டு, வெங்காயம் அதிகம் உண்பவர்கள். எளிதில் உணர்ச்சிவசப்படுபவராகவும், சுயநலம் அதிகம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
தாமஸ குணம்
அசைவ உணவை உண்பவர்களுக்கு உண்டாகும் குணம், தாமஸ குணமாகும். ஆன்மாவின் இயற்கை குணங்களான தயவு, கருணை இன்றி செயற்கை குணங்களால் தவறு செய்பவர்கள். மிகுதியான தூக்கம், சோம்பல் உடையவர்களாகவும் இருப்பார்கள்.