திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் சிறப்பு யாகம் 
ஆன்மிகம்

திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் சிறப்பு யாகம்

தருமபுர ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்தர் பரமாச்சாரிய சுவாமிகள் திருவையாறு ஐயாறப்பர் கோவிலுக்கு வருகை தந்து, சிறப்பு யாகத்தில் கலந்து கொண்டார்.

மாலை மலர்

திருவையாறில் உள்ள தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஐயாறப்பர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். இந்த நிலையில் கொரோனா தொற்று நோயால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் திருவிழா நடைபெறவில்லை.

சித்திரை மாத கடைசி நாளான நேற்று தருமபுர ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்தர் பரமாச்சாரிய சுவாமிகள் திருவையாறு ஐயாறப்பர் கோவிலுக்கு வருகை தந்து, கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் கொரோனா நோயில் இருந்து மக்களை காப்பாற்ற நடைபெற்ற சிறப்பு யாகத்தில் கலந்து கொண்டார். பின்னர் ரூ.35 லட்சம் செலவில் கோவிலுக்கு சொந்தமான சுப்பிரமணிய சுவாமி தேர் செய்யும் பணியை பார்வையிட்டு எத்தனை மாதங்களில் பணிகள் முடிவடையும்? என கேட்டறிந்தார்.

நிகழ்ச்சியில் தருமபுர ஆதீன கல்விக்குழு பொருளாளர் ஆடிட்டர் குருசம்பத்குமார், தருமபுர ஆதீன கல்லூரி செயலர் செல்வநாயகம், கல்லூரி முதல்வர் சாமிநாதன் மற்றும் கோவில் குருக்கள் ஆகியோர் தமிழக அரசு அறிவித்த சமூக இடைவெளியை பின்பற்றி முக கவசம் அணிந்து கலந்து கொண்டனர்.