திருப்பாவை 
ஆன்மிகம்

மார்கழி ஸ்பெஷல் தினமும் ஒரு திருப்பாவை பாடுவோம்: இன்று பாடல் - 28

கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்துண்போம் எனத்தொடங்கும் திருப்பாவையையும் அதன் பொருளையும் அறிந்து கொள்ளலாம்.

மாலை மலர்

கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்துண்போம் 

அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து உன் தன்னைப் 

பிறவி பெறுந்தனை புண்ணியம் யாம் உடையோம் 

குறைவொன்றும் இல்லாத கோவிந்தா! உன் தன்னோடு 

உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது 

அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச் 

சிறு பேர் அழைத்தனவும் சீறியருளாதே 

இறைவா! நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்

பொருள்: இடையர்குல மக்களாகிய நாங்கள் எல்லாம் கறவைப் பசுக்களின் பின்னாலேயே சென்று காட்டுக்குச் சென்று அங்கு உண்போம். கண்ணா, கள்ளம் கபடம் இல்லாத ஆயர்குலத்தில் வந்து பிறந்தாய் நீ. நீயே எங்களுக்குத் தலைவனாக வந்து சேர்நததை எண்ணி நாங்கள் புண்ணியமடைந்தோம். உனக்கும், எங்களுக்குமான உறவு பிரிக்க முடியாதது. உனது பெயரைச் சொல்லி அழைக்கிறோமேஎன்று சீறி எழாதே. நாங்கள் அறியாத சிறு பிள்ளைகள். அதற்காகக் கோபம் கொள்ளாமல், இறைவா உன் அருளை எங்களுக்குத் தந்தருள்வாயாக.