ஆண்டாள் 
ஆன்மிகம்

மார்கழி ஸ்பெஷல் தினமும் ஒரு திருப்பாவை பாடுவோம்: இன்று பாடல் - 26

மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான் எனத்தொடங்கும் திருப்பாவையையும் அதன் பொருளையும் அறிந்து கொள்ளலாம்.

மாலை மலர்

மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான் 

மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல் 

ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன 

பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சனியமே 

போல்வன சங்கங்கள் போய்ப்பா டுடையனவே 

சாலப் பெரும்பறையே பல்லாண் டிசைப்பாரே 

கோல விளக்கே கொடியே விதானமே 

ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய்

பொருள்: காண்போர் மயங்கும் வண்ணம் பேரழகைக் கொண்டவனே, நீலமணிவண்ணனே, கண்ணனே, முன்னோர் எல்லாம், வழி வழியாக அனுஷ்டித்து வந்த பாவை நோண்புக்கு தேவையான பொருள்களை எல்லாம் கூறுவாயாக. உலகமே நடுநடுங்க வைக்கும் பால் நிறம் கொண்ட உன்னுடைய பாஞ்சஜன்யத்தைப் போன்ற சங்குகள், தோல் கருவியாக பெரும் பறை, பல்லாண்டு பாரும் பாராயண கோஷ்டியினர், மங்கல தீபங்கள், கொடிகள், மேல் விதானத்தை தந்து அருள்வாயாக. ஆலிலையில் துயில்பவனே, நாங்கள் கேட்பதை தந்து அருள் புரிவாயாக.