ஆன்மிகம்

அந்தோணியார் ஆலயத்தில் சப்பர பவனி

பாளையங்கோட்டை சேவியர் காலனியில் புனித அந்தோணியார் ஆலயத்தில் லியோ ஜெரால்டு தலைமையில் சிறப்பு திருப்பலி, ஆராதனையும் அதனை தொடர்ந்து அந்தோணியார் சப்பர பவனி நடந்தது.

மாலை மலர்

பாளையங்கோட்டை சேவியர் காலனியில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் லியோ ஜெரால்டு தலைமையில் நேற்று மாலை சிறப்பு திருப்பலி, ஆராதனை நடந்தது.

தொடர்ந்து அந்தோணியார் சப்பர பவனி நடந்தது. அந்த பகுதியில் உள்ள முக்கிய தெருக்களில் சப்பரம் சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. இந்த நிகழ்ச்சியில் ஆலய பங்கு தந்தை அந்தேணி சேவியர் மற்றும் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.