புலியகுளம் புனித அந்தோணியார் ஆலயத்தில் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்ற போது எடுத்த படம். 
ஆன்மிகம்

புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

கோவை புலியகுளத்தில் பிரசித்தி பெற்ற புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மாலை மலர்

பங்கு குரு ஜார்ஜ்தனசேகர் முன்னிலை வகித்தார். விழாவில், கோவை நகரம் மற்றும் மாவட்டம் முழுவதிலும் இருந்து திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

இன்று (திங்கட்கிழமை) 8-ம் நாள் நவநாள் நிகழ்ச்சி நடைபெறுகிறது. காலை 6 மணி மற்றும் மாலை 6 மணிக்கு திருப்பலி நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை(செவ்வாய்க்கிழமை) புனித அந்தோணியார் திருநாள் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து ஒவ்வொரு நாளும் திருப்பலி நிகழ்ச்சி நடைபெறுகிறது.

வருகிற 17-ந் தேதி திருப்பலி, புதுநன்மை, உறுதி பூசுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு நடை பெறும் இந்த நிகழ்ச்சிகளில் கோவை மறைமாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாஸ் கலந்து கொள்கிறார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் திருவிழா வருகிற 18-ந்தேதி நடைபெறுகிறது. அன்று காலை 8 மணிக்கு கோவை மறைமாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாஸ் தலைமையில் திருவிழா திருப்பலி நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு 7.30 மணிக்கு ஆடம்பர தேர்பவனி நடைபெறுகிறது.