ஆன்மிகம்

குடும்பத்துடன் அருள்பாலிக்கும் சனீஸ்வரன்

தஞ்சாவூர் அருகே உள்ள திருநறையூர் ராமநாதசுவாமி ஆலயத்தில் சனீஸ்வரர் தனது குடும்பத்தினருடன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

மாலை மலர்

தஞ்சாவூர் அருகே உள்ள திரு நறையூர் ராமநாதசுவாமி ஆலயத்தில் சனீஸ்வர பகவானுக்கு தனிச் சன்னிதி அமைந்துள்ளது. இந்த சன்னிதியில் சனீஸ்வரர் தனது குடும்பத்தினருடன் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.

சனீஸ்வரருக்கு இடது பக்கத்தில் மந்தா தேவியும், வலது பக்கத்தில் ஜேஷ்டாதேவியும் காட்சிதருகின்றனர். அவர்களுக்கு அருகே சனிதேவனின் புதல்வர்களாக குளிகன் மற்றும் மாந்தி இருக்கின்றனர். இது ஒரு அபூர்வமான அமைப்பாகும்.