ஆன்மிகம்

மங்கலம் தரும் சங்கு வழிபாடு

பெரும்பாலும் கண்விழித்ததும் தெய்வப் படங்களை பார்த்தால், இறைவனின் திருவருள் நமக்குக் கிடைக்கும். சங்கு வைத்திருப்பவர்கள், சங்கின் முகத்தில் விழித்தால் சங்கடங்கள் யாவும் தீரும்.

பொதுவாக காலையில் கண் விழித்து எழுந்ததும், எதன் முகத்தில் முழிப்பது என்பது பலரும் கேட்கும் கேள்விகளில் ஒன்று. பெரும்பாலும் கண்விழித்ததும் தெய்வப் படங்களை பார்த்தால், இறைவனின் திருவருள் நமக்குக் கிடைக்கும்.

அதைத் தொடர்ந்து நிலைக் கண்ணாடியைப் பார்ப்பதும் நல்லது. பிறகு முன்னோர் படங்களின் முன் நின்று அவர்களது ஆசியைக்கேட்டு வழிபடுவது நல்ல பலன்களைத் தரும்.

சங்கு வைத்திருப்பவர்கள், சங்கின் முகத்தில் விழித்தால் சங்கடங்கள் யாவும் தீரும்; வாழ்வில் சந்தோஷம் சேரும். வலம்புரிச் சங்கு வைத்திருப்பவர்கள், அதில் நாணயங்களைப் பரப்பி, அருகில் கனி வகைகளை வைத்து, நடுநாயகமாக கற்பக விநாயகர் படத்தையும் வைத்து, தினமும் அதில் கண் விழித்து வந்தால் கற்பக விருட்சமாக வாழ்க்கை மாறும்.