எட்டரை சகாயமாதா ஆலய தேர்பவனி 
ஆன்மிகம்

எட்டரை சகாயமாதா ஆலய தேர்பவனி

சோமரசம்பேட்டை எட்டரை சகாயமாதா ஆலயத்தின் தேர்பவனியை முன்னிட்டு தேர் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதியின் வழியாக சென்று அருள்பாலித்து விட்டு மீண்டும் கோவிலை வந்தடைந்தது.

மாலை மலர்

சோமரசம்பேட்டை அருகில் உள்ள எட்டரை சகாயமாதா ஆலயத்தின் தேர்பவனி விழாவை முன்னிட்டு கடந்த 13-ந்தேதி மாலை சோமரசம்பேட்டை திருச்சிலுவை இல்ல அலெக்சாண்டர் கொடியேற்றி தொடங்கி வைத்தார்.

14-ந்தேதி மாலை நவநாள் திருப்பலியும் அதனை தொடர்ந்து இனியானூர் அருள்ராஜ் உரையும் நடைபெற்றது. கடந்த 15-ந்தேதி இரவு அலங்கரிக்கப்பட்ட அன்னையின் தேர் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு எட்டரையின் முக்கிய வீதியின் வழியாக சென்று அருள்பாலித்து விட்டு மீண்டும் கோவிலை வந்தடைந்தது. அதன்பின் திருவிழா கூட்டுத்திருப்பலியும் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை சோமரசம்பேட்டை பங்குத் தந்தை எட்வர்ட் ராஜா மற்றும் பங்கு மக்கள் செய்திருந்தனர்.