மனிதத் தலையும், பாம்பு உடலும் கொண்டவர் ராகுபகவான். பாம்பு தலையும் மனித உடம்பும் கொண்டவர் கேது பகவான். கேது பகவான் உங்களுக்கு கேட்டதும் வரம் தர, நவக்கிரகத்தில் உள்ள கேதுவை வழிபாடு செய்யலாம். கேதுவிற்கு அதிதேவதையாக விளங்கும் விநாயகப் பெருமான், பிரம்மா ஆகியோரை தரிசிக்கலாம். ஆனை முகன் என்பதால் யானைக்கு கரும்பு, வாழைப்பழம் போன்றவற்றை உணவாக அளித்தால், கேது திசையில் நற்பலன்களை கேது வாரி வழங்குவார்.
பிரம்மாவை வழிபட திருவையாறு அருகில் உள்ள கண்டியூருக்குச் செல்லலாம். அங்குள்ள பிரம்ம தேவனை வணங்கினால் கேதுவின் அருளுக்குப் பாத்திரமாகலாம்.