பிரத்யங்கிரா தேவி 
ஆன்மிகம்

எதிரிகளை பலமிழக்கச் செய்வாள் பிரத்யங்கிரா தேவி

பிரத்யங்கிரா தேவியின் காயத்ரி மந்திரத்தைச் பாராயாணம் செய்து, ஆத்மார்த்தமாக வேண்டிக்கொள்ளுங்கள். துஷ்ட சக்திகளையெல்லாம் அண்டவிடாமல் நம்மைக் காத்தருள்வாள் தேவி.

பேய் பில்லி சூன்யம் பறந்தோட, பயம் நீங்க செய்வாள் என்பதும் ஐதீகம். ஞாயிற்றுக்கிழமையன்று ராகுகாலம் மாலை 4.30 முதல் 6.00 மணிவரை. இந்த நேரத்தில் வீட்டில் விளக்கேற்றுங்கள். செந்நிற மலர்கள் சூட்டி அலங்கரியுங்கள்.

பிரத்யங்கிரா தேவியின் காயத்ரி மந்திரத்தைச் பாராயாணம் செய்து, ஆத்மார்த்தமாக வேண்டிக்கொள்ளுங்கள். துஷ்ட சக்திகளையெல்லாம் அண்டவிடாமல் நம்மைக் காத்தருள்வாள் தேவி. பிரத்யங்கிரா தேவி, சக்தி வாய்ந்தவள். தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு கருணையே உருவாகி அருள்பாலிப்பவள். தொடர்ந்து தேவியை வழிபடுங்கள். தடைகள் அனைத்தும் தகர்த்து, முன்னேற்றப் பாதையில் வாழ்க்கையை அமைத்துக் கொடுத்து அருளுவாள் பிரத்யங்கிரா தேவி.