நவராத்திரி நவதானிய நைவேத்தியம் 
ஆன்மிகம்

நவராத்திரி நவதானிய நைவேத்தியம்

நவராத்திரியின் ஒன்பது நாளும் துர்க்கையை ஒன்பது வடிவாக வழிபட வேண்டும். ஒன்பது விதமான துர்க்கைகளையும் வழிபடுவதன் பலனாக பலவித சிறப்புகள் நமக்கு வந்து சேரும்

மாலை மலர்

நவராத்திரியின் ஒன்பது நாளும் துர்க்கையை ஒன்பது வடிவாக வழிபட வேண்டும். ஒன்பது விதமான துர்க்கைகளையும் வழிபடுவதன் பலனாக பலவித சிறப்புகள் நமக்கு வந்து சேரும்.

நவராத்திரி பூஜை செய்வதால் கடன் நிவாரணம், மன அமைதி பெறலாம். அறிவு பெருகும். இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி என மூன்று சக்திகளைப் பெறலாம். நவராத்திரி பண்டிகையின் போது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நவதானியத்தை நைவேத்தியமாக படைத்து வழிபட வேண்டும்.

கோதுமை, பச்சரிசி, துவரை, பச்சைப்பயறு, கடலை, மொச்சை, எள்ளு, உளுந்து, கொள்ளு ஆகியவை அந்த நவதானியங்கள் ஆகும்.