அரிசியை ஒரு முறை வேக வைத்து விட்டால் அதை உடனே நைவேத்தியம் செய்து விட வேண்டும்.
நெல்லை ஒரு முறை வேக வைத்து காய்ந்த பிறகு அரிசியாக்கி விட்டால் பழைய சோறுக்குச் சமம் தானே? எனவே புழுங்கல் அரிசி நைவேத்தியத்திற்கு உகந்தது அல்ல. பச்சரிசியே சிறந்தது.
பிள்ளையார் சதுர்த்தியன்று இட்லி நிவேதனம் செய்வார்கள். இதற்குக் கூட புழுங்கல் அரிசியை உபயோகிக்காமல் பச்சை அரிசியிலேயே செய்வார்கள்.