ராகு, கேது என்ற இரண்டு கிரகங்களை பாம்புகள் என்று சொல்கிறார்கள். நாக வழிபாடு செய்தால் வாழ்க்கையில் என்னென்ன நன்மைகளை பெறலாம் என்று பார்க்கலாம்.
1) குடும்பம் நலமாக இருக்க வேண்டி வழிபடுதல்.
2) மகப்பேறு வேண்டி வழிபடுதல்.
3) பிரசவம் இடைநறு இன்றி நடைபெற வேண்டி வழிபடுதல்.
4) கேது திசை நடப்பவர்கள் புற்று வழிபாடு செய்து நோய் வராமல் தடுக்க வேண்டுவார்கள்.
5) நாக தோஷம் உள்ளவர்கள் அத்தோஷம் நீங்கப் புற்று வழிபாடு செய்வார்கள்.
6) தொழு நோய் நீங்கவும் புற்று வழிபாடு செய்யப்படுகிறது.
7) குழந்தைகள் தோஷங்கள் காரணமாக அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்படுவார்கள். அவர்கள் நலமுடன் வாழவும் புற்று வழிபாடு நடைபெறுகிறது.