தவக்கோலத்தில் தெய்வானையுடன் முருகப்பெருமான் அருள்பாலித்த காட்சி. 
ஆன்மிகம்

சூரபத்மனை சம்ஹாரம் செய்ய இன்று தாயிடம் சக்திவேல் வாங்கும் திருப்பரங்குன்றம் முருகப்பெருமான்

கந்தசஷ்டி திருவிழாவையொட்டி சூரபத்மனை சம்ஹாரம் செய்வதற்காக திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் இன்று தன் தாயார் கோவர்த்தனாம்பிகையிடம் சக்திவேல் வாங்குகிறார்.

இதேபோல சண்முகர் சன்னதியில் சண்முகார்ச்சனை நடந்தது. மேலும் வள்ளி, தெய்வானை சமேத சண்முகருக்கு மயில்வாகன சேவை அலங்காரம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சிகள் கண்கொள்ளாக்காட்சியாக இருந்தது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 7 மணிக்கு கோவிலுக்குள் ஆலய பணியாளர்கள் திருக்கண்ணில் வேல் வாங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் சத்தியகிரீஸ்வரர் முன்னிலையில் இருமாப்பு கொண்ட சூரபத்மனை வெல்லுவதற்காக முருகப் பெருமான் தன் தாயார் கோவர்த்தனாம்பிகையிடம் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெறுகிறது.