காரைக்காலைப் போன்றே கன்னியாகுமரியில் உள்ள மிகவும் பழமையான பார்வதி அம்மன் சமேத குகநாதீஸ்வரர் திருக்கோவிலிலும் ஆனி மாத பவுர்ணமி நன்னாளின் இரவில் ‘காரைக்கால் அம்மையார் மாங்கனித் திருவிழா’ ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுகிறது.
இங்கு குகநாதீஸ்வரர் பிச்சாண்டவர் கோலத்தில் சப்பர வாகனத்தில் எழுந்தருளி கோவில் வெளிப்பிரகாரத்தை வலம் வர, பின்னர் காரைக்கால் அம்மையார் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தட்டு வாகனத்தில் எழுந்தருளி வலம்வர அதுசமயம் பக்தர்கள் மாங்கனி படைத்தும், இறைத்தும் வழிபட்டு ஈசனின் இன்னருள் பெறுகிறார்கள்.