ஆன்மிகம்

பேரும் புகழும் தரும் அனுமன் ஸ்லோகம்

அனுமனுக்கு உகந்த ஜெயந்தியான அனுமன் ஜெயந்தி அன்று அவரை ஆராதித்து வழிபட்டுக் கொண்டாடினால் பேறும் புகழும் கிடைக்கும்.

மாலை மலர்

அனுமனுக்கு உகந்த ஜெயந்தியான அனுமன் ஜெயந்தி மார்கழி மாதம் 3-ந் தேதி (18.12.2017) திங்கட்கிழமை வரும் மூலம் நட்சத்திரமன்று வருகின்றது. அன்றைய தினம் அவரை ஆராதித்து வழிபட்டுக் கொண்டாடினால் பேறும் புகழும் கிடைக்கும்.

அனுமன் ஜெயந்தி நாளில்,

‘மூலம் உனது விண்மீனாம்

மோதும் கதையுன் கையிருப்பாம்!

ஆழக்கடலை கடப்பதற்கு

அரைநொடி போதும் உனக்கென்பார்!

வாழத் துடிக்கும் மாந்தர்களின்

வருங்காலத்தைக் கணிப்பவனே!

கால நேரம் பாராமல்

கண்ணீர் துடைப்பாய் அனுமானே!’

என்று மனமுருகிப் பாடுங்கள். மாருதியின் அருள் கிடைக்கும்.