குரு பகவான் 
ஆன்மிகம்

புத்திரப்பேறு கிடைக்க வியாழக்கிழமைகளில் சொல்ல வேண்டிய குரு பகவான் மந்திரங்கள்

குரு பகவானை வியாழக்கிழமைகளில் இந்த மந்திரங்களை சொல்லி வழிபடுவோருக்கு உயர் பதவி, புத்திரப்பேறு, நிறைவான செல்வம் போன்றவற்றை கொடுப்பார்.

குரு பகவான், தம்மை வழிபடுவோருக்கு உயர் பதவி, புத்திரப்பேறு, நிறைவான செல்வம் போன்றவற்றை கொடுப்பதோடு தம்மால் ஏற்படக்கூடிய கல்லீரல், காது, இடுப்புகளில் ஏற்படும் நோய்களுக்கு தாமே மருந்தாக அருள்புரிகிறார். வியாழக்கிழமை விரதம் இருந்து நெய் தீபம் ஏற்றி குருவிற்குரிய வஸ்திரம், தானியம் கொண்டு வழிபடுவது நன்மை தரும்.

குரு சுலோகம் :

குரு பிரம்மா குரு விஷ்ணு

குரு தேவோ மகேஸ்வர;

குரு சாஷாத் பரப்பிரம்மா

தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ

குரு மந்திரம் :

தேவாணாஞ்ச ரிஷிணாஞ்ச

குரும் காஞ்சன ஸந்நிபம்

புத்தி பூதம் திரிலோகேஸம்

தம் நமமி பிருகஸ்பதிம்

குரு பகவான் காயத்ரி :

வருஷபத் வஜாய வித்மஹே

க்ருணீ ஹஸ்தாய தீமஹீ

தந்நோ குரு ப்ரசோதயாத்