ஆன்மிகம்

Durga gayatri mantra in tamil: தடைகளை நீக்கும் துர்க்கை காயத்ரி மந்திரம்

இந்த மந்திரத்தை கூறுவதன் பயனாக எதையும் சாதிக்கும் மன உறுதி பிறக்கும். எதிரிகளை வெல்லும் சக்தி கிடைக்கும். தடைகள் நீங்கி எதிலும் வெற்றி உண்டாகும்.

மாலை மலர்

ஓம் காத்யாயனய வித்மஹே

கன்யாகுமாரி தீமஹி

தன்னோ துர்கிப்ரசோதயாத்

பொது பொருள்: காத்யாயனய மகரிஷிக்கு மகளாய் பிறந்தவளே, என்றும் இளம் குமரியாய் விளங்குபவளே உங்களை வணங்குவதன் பயனாக என் மனதை தெளிவுபடுத்தி என் அறிவை மேம்படுத்தி பல நற்பலன்களை எனக்கு அளிக்க உங்கள் பாதம் பணிகிறேன்.

இந்த மந்திரத்தை தினமும் 108 முறை கூறுவது சிறந்தது. தினமும் கூற முடியாதவர்கள் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் கூறலாம். ராகு காலம் துர்க்கையை வழிபட உகந்த நேரம் என்பதால் இந்த மந்திரத்தை ராகு காலத்திலும் கூறலாம். இந்த மந்திரத்தை கூறுவதன் பயனாக எதையும் சாதிக்கும் மன உறுதி பிறக்கும். எதிரிகளை வெல்லும் சக்தி கிடைக்கும். தடைகள் நீங்கி எதிலும் வெற்றி உண்டாகும்.