தோஷ பரிகாரங்கள்

ஆடி மாதம் கோனியம்மனுக்கு செய்யும் அபிஷேகங்களும்... கிடைக்கும் பலன்களும்...

ஆடி மாதம் அம்மனை வழிபட உகந்த மாதமாகும். கோனியம்மனுக்கு அபிஷேகம் செய்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

மாலை மலர்

கோனியம்மனுக்கு அபிஷேகம் செய்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும். அதன் விவரம் வருமாறு:-

சந்தன தைலம்- சுகம் தரும்

திருமஞ்சனம்- சம்பத்து நல்கும்

பாசிப்பயறு மாவு- மகிழ்ச்சியாய் வாழலாம்

அரிசி மாவு - உயர்பதவி அடையலாம்

நெல்லிப்பொடி - சாந்தி உண்டாகும்

வில்வப்பொடி - யோகம் அளிக்கும்

பஞ்சாமிர்தம் - கல்வி அறிவு பெருகும்

பால் - மனக்கவலை தீரும்

தயிர் - மனநோய் அகலும்

தண்ணீர்- சாந்தி உண்டாகும்

நெய் - தொழில் சிறக்கும்

தேன் - குரல் இனிமை பெறும்

வெல்லம் - துக்க நிவர்த்தி அளிக்கும்

கரும்புச்சாறு - மன அமைதிபெறும்

இளநீர் - பக்தி பெருகும்

எலுமிச்சம்பழம் - விதியை வெல்லலாம்

சாதம் - சகல பாக்கியம் உண்டாகும்

திருநீறு - துன்பம் நீங்கும்

சந்தனம் - நிலம் வீடு வாங்கலாம்

நல்லெண்ணெய் - ஐயம் நீங்கும்

பழவகை - திருவருள் பெறலாம்

வாழைப்பழம் - வறுமை ஒழியும்

கரும்புச் சர்க்கரை - குழந்தைபேறு கிட்டும்

எள் - சனி பயம் நீங்கும்

மாம்பழம்- வெற்றியை கொடுக்கும்

பூ மாலை- உடல் பிணி தீரும்

பரிவட்டம்- பெருஞ்செல்வம் பெருகும்

பச்சரிசி- தீராக்கடன் தீரும்

மஞ்சள் தூள் - விபத்துகள் தவிர்க்கலாம்

தேங்காய்- பொன்பொருள் சேரும்

பேரிச்சம்பழம்- கடல் கடந்து செல்லலாம்

கல்கண்டு- வாகனம் வாங்கலாம்.

முந்திரி- பிரிந்தவர் ஒன்று சேரலாம்

ஏலம்- தீமைகள் நீங்கும்

உலர் திராட்சை- சங்கடங்கள் தீரும்

எள்ளுமாவு- மரணபயம் நீங்கும்

எள்ளுருண்டை- அரசு வேலை பெறலாம்

எள்ளு சாதம் - பகை நீங்கும்

பன்னீர் - நன்னடத்தை உண்டாகும்

கும்ப ஜலம்- சாந்தி உண்டாகும்