ஆன்மிகம்

அமாவாசையும் அரசமரமும்

அமாவாசை திதியும், திங்கட்கிழமையும் சேர்ந்து வரும் தினத்தை ‘அமாசோமவாரம்’ என்பார்கள். அந்த நாளில் அரச மரத்தை வழிபட்டு வலம் வருதல் சிறப்பு.

மாலை மலர்

அமாவாசை திதியும், திங்கட்கிழமையும் சேர்ந்து வரும் தினத்தை ‘அமாசோமவாரம்’ என்பார்கள். அந்த நாளில் அரச மரத்தை வழிபட்டு வலம் வருதல் சிறப்பு. இதனை ‘அஸ்வத்த பிரதம்சணம்’ என்பர். ‘அஸ்வத்தம்’ என்பதற்கு ‘அரச மரம்’ என்று பொருள். மும்மூர்த்திகளின் வடிவமே அரச மரம். அரச மரத்தை வணங்குபவர்களின் பாவம், நோய்கள் நீங்கும்.

அரச மரத்தை மூன்று முறை வலம் வந்தால் இஷ்ட சித்திகளும், ஐந்து முறை வலம் வந்தால் வெற்றியும், ஒன்பது முறை வலம் வந்தால் புத்திர பாக்கியமும், பதினொரு முறை வலம் வந்தால் சகல பாக்கியங்களும், நூற்றியெட்டு முறை வலம் வந்தால் அஸ்வமேத யாகம் நடத்திய பலனும் கிடைக்கும்.

சந்திரனின் ஆதிக்கம் மிகுந்த அமாவாசையும், சந்திரனுக்குரிய திங்கட்கிழமையும் சேர்ந்த நாளில், அதிகாலையில் அரச மரத்தை நாராயணராக பாவித்து,

‘மூலதோ பிரம்ஹரூபாய,

மத்யதோ விஷ்ணு ரூபிணே

அக்ரத: சிவ ரூபாய விருக்ஷ

ராஜய தே நமோ நம’

என்ற சுலோகத்தை சொல்லியபடி 108 முறை வலம் வரவேண்டும். இதனால் எல்லா வித நன்மைகளும் வந்தடையும்.