கும்பகோணம் காமராஜர் சாலையில் உள்ள தூய அலங்கார அன்னை பேராலய ஆண்டு திருவிழா கடந்த 6-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் முதன்மை குரு அமிர்தசாமி கலந்து கொண்டு கொடி ஏற்றி வைத்தார். தேர்பவனியை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு கும்பகோணம் மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையில் திருப்பலி நடைபெற்றது.
திருப்பலியை தொடர்ந்து இரவு 8 மணிக்கு அலங்கார அன்னையின் அலங்கரிக்கப்பட்ட தேர் ஆலய வளாகத்தில் இருந்து புறப்பட்டது. கும்பகோணம் மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி பிரார்த்தனை செய்து தேர்பவனியை தொடங்கி வைத்தார். இந்த தேர் ஆலயத்தை சுற்றி வந்தது. இதற்கான ஏற்பாடுகளை அருட்தந்தையர்கள் மற்றும் அருட் சகோதரிகள் செய்திருந்தனர்.