ஆன்மிக களஞ்சியம்

விரத பலன்கள்

விரதம், நோன்பை எல்லா மதத்தினரும் கடைபிடித்து வருகின்றனர். மன உறுதிக்கு துணையாக இருப்பது விரதம் தான்.

மாலை மலர்

விரதம், நோன்பை எல்லா மதத்தினரும் கடைபிடித்து வருகின்றனர்.

மன உறுதிக்கு துணையாக இருப்பது விரதம் தான்.

ஒவ்வொரு விரதத்துக்கும் உரிய பலன்கள் கிடைக்கும்.

1. திங்கள் கிழமை விரதம் இருப்பதன் மூலம் கணவனின் பரிபூர அன்பைப் பெறலாம்.

2. செவ்வாய் கிழமை விரதம் இருப்பதன் மூலம் கணவன் மனைவி தகராறு நீங்கி வாழலாம்.

3. புதன் கிழமை விரதம் இருந்தால் நோய்கள் தீரும்.

4. வியாழன் கிழமை விரதம் இருப்பதன் மூலம் புத்திர பாக்கியம் பெறலாம்.

5. வெள்ளிக்கிழமை விரதம் இருப்பதன் மூலம் கணவன் நீண்ட ஆயுளைப் பெறலாம்.

6. சனிக்கிழமை விரதம் இருந்தால் செல்வம் பெருகும்.

7. ஞாயிற்றுக்கிழமை விரதம் இருப்பதன் மூலம் நீடித்த நோயில் இருந்து விடுதலை பெறலாம், நோய் வராமல் தடுத்துக் கொள்ளலாம்.

ஆவணி மாதம் அஷ்டமியுடன் சேர்ந்து வரும் வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமி விரதம் இருந்தால்

எல்லா நன்மைகளும் கிட்டும்.

எனவே உங்கள் நிலைக்கு ஏற்ப விரதம் இருங்கள்.