ஆன்மிக களஞ்சியம்

விநாயகர் வலது கையில் ஸ்வஸ்திக்குறி ஏன்?

கிருதயுகத்தில் தேஜஸ்வி என்ற பெயரில் சிம்மவாகனத்தில் தோன்றுவார். துவாபர பாகத்தில் கஜனைராக மூஞ்சுறு வாகனத்தில் தோன்றுவார்.

மாலை மலர்

ஸ்வஸ்திகம் என்பது இந்த உலகத்தின் நான்கு திசைகளிலும் இறைவன் அருளாட்சி செய்வதைக் குறிக்கிறது.

பரந்த இந்தப் பிரபஞ்சத்தில் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்தலையும், நான்கு வேதங்களின் கோட்பாடுகள்படி

நாம் வாழ்ந்தால் இறைவனது திருவடி நிழல்பட்டு நமது வாழ்க்கைச் சக்கரம் நன்கு சுழலும் என்பதை குறிப்பிடுகிறது.

அதில் உள்ள ஒவ்வொரு வளைவும் கூறும் தத்துவம் உயர்வானது.

ஆன்மாவானது நானம் யோகம், சரியை, கிரியைகளைத் தாண்டி பகவானிடம் நெருங்க வேண்டுமானால்

பஞ்ச பூதங்களான நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகியவற்றைக் கொண்ட இந்த உலக தர்மங்களை

கடைபிடித்து வாழவேண்டும் என்று விநாயகர் ஸ்வஸ்திகத்தை கையில் வைத்துக் கொண்டு உணர்த்துகிறார்.

மேலும் திருவிளையாடற் புராணத்தில் நமது சைவப் பெரியார்கள் நமது ஆணவமாகிய யானையை வெல்ல,

விநாயகர் என்ற யானை முகனை எப்படி வணங்குவது என்று கூறி உள்ளனர்.

உள்ளமெனும் கூடத்தில் ஊக்கமெனும்

தறிநிறுவி உறுதியாகத்

தள்ளரிய என்பென்னும் தொடர்பூட்டி

இடர்படுத்தித் தறுகண் பாசக்

கள்ளவினை பசுபோதக் கவனமிடக்

களித்துண்டு கருணை என்னும்

வெள்ளமதம் பொழிசித்தி வேழத்தை

நினைந்து வருவிணைகள் தீர்ப்போம்.

யுகங்களில் தோன்றும் கணபதிகள்

கிருதயுகத்தில் தேஜஸ்வி என்ற பெயரில் சிம்மவாகனத்தில் தோன்றுவார்.

த்ரேதா யுகத்தில் மயூரேஸ்வராக மயில் வாகனத்தில் தோன்றுவார்.

துவாபர பாகத்தில் கஜனைராக மூஞ்சுறு வாகனத்தில் தோன்றுவார்.

கலியுகத்தில் பிள்ளையாராக எலி வாகனத்தில் தோன்றுவார்.