ஆன்மிக களஞ்சியம்

வீரபத்திரர் அவதார கதை-யாகத்தீயில் விழுந்த தாட்சாயிணி

ஈசன் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் தாட்சாயினி கேட்கவில்லை. தந்தை தட்சனை திருத்த அவள் செய்த முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கவில்லை.

வீரபத்திரர் அவதார கதை-யாகத்தீயில் விழுந்த தாட்சாயிணி

விதி வசமோ... அல்லது தந்தை பாசமோ தெரிய வில்லை.

தட்சனின் மகளான தாட்சாயிணியும், "என் தந்தை நடத்தும் யாகத்தை காணச் செல்கிறேன். அனுமதி தாருங்கள்" என்று ஈசனிடம் வேண்டினாள்.

ஈசன் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் தாட்சாயினி கேட்கவில்லை.

"சிவத்தை விட சக்திதான் பெரிது" என்று சொல்லி விட்டு தட்சன் நடத்தும் யாகப் பகுதிக்கு வந்தாள்.

அங்கு வந்த பிறகு தான், ஈசனுக்கு இழைக்கப்படும் அவமானங்களை உணர்ந்தாள்.

தந்தை தட்சனை திருத்த அவள் செய்த முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கவில்லை.

கணவர் பேச்சை கேட்காமல் வந்தததற்கு தக்க தண்டனை கிடைத்து விட்டதாக வருத்தம் அடைந்த தாட்சாயினி, அங்கிருந்த யாகக் குண்டத்தில் பாய்ந்து உயிரைப் போக்கிக் கொண்டாள்.