சென்னை தங்கசாலைத் தெருவில் அமைந்துள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவிலில்
விநாயகப் பெருமான் தனது உடன் பிறப்பான முருகப்பெருமானுக்கு தன் உடலில் பாதியைக் கொடுத்துள்ளார்.
அவருக்கு பின்புறம் முருகனது தோற்றம் உள்ளது.
எழு நாகர்தலை உருவின் மேல் ஐந்து முருகங்களுடன் அமர்ந்த கோலத்தில் இவர் காணப்பட,
பின்புறம் நின்ற கோலத்தில் தம்பி முருகன் இருக்கிறார்.
இவரை வணங்கினால் சகோதர ஒற்றுமை ஏற்படும் என்று நம்புகிறார்கள்.