கோவை மாவட்டத்தில் உள்ள பேரூர் பண்டீஸ்வர சுவாமி கோவிலில் பிரதிஷ்டை செய்வதற்காக மதுரையில் இருந்து 5 அடி உயரமும், 3 அடி பருமனும் கொண்ட விநாயகர் விக்கிரகம் ஒன்றை வண்டியில் வைத்து எடுத்து வந்தார்கள்.
அப்போது வண்டியின் அச்சு முறிந்து விநாயகர் சிலை தற்போது ஈச்சனாரி விநாயகர் ஆலயம் எழுந்தருளி இருக்கும் இடத்தில் அப்படியே அமர்ந்துவிட்டதாம்.
விநாயகர் சிலையை பட்டீஸ்வரத்திற்கு எடுத்து செல்ல பக்தர்கள் எவ்வளவோ முயன்றும் விநாயகரை அசைக்கக்கூட முடியவில்லை.
இறுதியில் அங்கேயே விநாயக பெருமான் கலியுக கர்ணாமூர்த்தியாக அருள் புரிந்து வருகிறார்.