ஆன்மிக களஞ்சியம்

சூரியனார் கோவில்

தமிழ்நாட்டில் முதலாம் குலோத்துங்கன் சூரியனார் கோவிலை கட்டினான். ஆனால் சூரியன் உருவமும் வழிபாடும் வளர்ந்த பின்னிலையில் தான் இது கட்டப்பட்டுள்ளது.

மாலை மலர்

தமிழ்நாட்டில் முதலாம் குலோத்துங்கன் சூரியனார் கோவிலை கட்டினான்.

இது ஒரு சிறிய கோவில் தான்.

ஆனால் சூரியன் உருவமும் வழிபாடும் வளர்ந்த பின்னிலையில் தான் இது கட்டப்பட்டுள்ளது.

சூரியனை முதன்மையாக கொண்டு நவக்கிரகங்களுக்கென தனித்து அமைந்த கோவில் எனும் சிறப்பை சூரியனார் கோவில் பெற்றுள்ளது.

ஜோதிட முக்கியத்துவம் வாய்ந்த இத்தலத்தில் மற்ற எட்டு கிரகங்களுக்கான கடவுள்களும் தனித்தனி சந்நிதியில் காட்சியளிக்கின்றனர்.

சூரியனார் கோவில் வந்து வணங்குபவர்களுக்கு சூரியபகவான் அருளால் செல்வம் கொழிக்கும், உடல் வளம் பெருகும் என்பது ஒரு நம்பிக்கை.