ஆன்மிக களஞ்சியம்

சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் குறித்த ஆழ்வார்களின் பாசுரங்கள்

திருமங்கையாழ்வாரும் நம்மாழ்வாரும் சோளிங்கர் நரசிம்மப் பெருமானை அக்காரக்கனி என்றே அழைத்துள்ளனர்.

மாலை மலர்

பண்டெல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம்

கொண்டங் குறைவாயார்க்கு கோவில் போல் வண்டு

வளம்கிளரும் நீர்சோலை வண்பூங் கடிகை

இளங்குமரன் தன்விண்ணகர்.

பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி. 61

மிக்காளை மறையாய் விரிந்த விளக்கை என்னுள்

புக்காளைப் புகழ்சேர் பொலிகின்ற பொன்மலையைத்

தக்கானைக் கடிகைத் தடங்குன்றின் மிசையிருந்த

அக்காரக் கனியை அடைந்துய்ந்து போனேனே.

திருமங்கைஆழ்வார் பெரியதிருமொழி. 8-9-4.

எக்காலத் தெந்தையாய் என்னுள் மன்னில்

மற்றெக் காலத்திலும் யாதொன்றும் வேண்டேன்

மிக்கார் வேதவிமலர் விழுங்குமென்

அக்காரக் கனியே உன்னையே யானே.

நம்மாழ்வார் திருவாய்மொழி. 2-9-8.

திருமங்கையாழ்வாரும் நம்மாழ்வாரும் சோளிங்கர் நரசிம்மப் பெருமானை அக்காரக்கனி என்றே அழைத்துள்ளனர்.

பேயாழ்வாரும் திருமங்கை ஆழ்வாரும் கடிகை என்றே சோளிங்கரைக் குறிப்பிட்டுள்ளனர்.