ஆன்மிக களஞ்சியம்

சரஸ்வதி தேவி தாமரை மலரில் அமர்ந்திருப்பது ஏன்?

நீரின் உயரத்திற்கு ஏற்ப தாமரை மலரும் நீரில் மிதக்கும். கல்வியும் அவ்விதமே தான்.

மாலை மலர்

குளம் வற்றி பறவைகள் வேறிடம் தேடிச் சென்று விட்டாலும் அல்லி மலர்கள், தாமரை மலர்கள் மட்டும் அந்தக் குளத்திலேயே இருக்கும்...

இருபது வருடம் ஆனாலும், காய்ந்து கருகிப் போனாலும் அங்கேயே கிடக்கும்.

மீண்டும் தண்ணீர் வரும் போது காய்ந்து கருகிக்கிடக்கும் அந்தக் கொடிகள் மீண்டும் பொலிவுடன் எழுந்து நின்று பூக்களைத் தரும்.

நீரின் உயரத்திற்கு ஏற்ப தாமரை மலரும் நீரில் மிதக்கும்.

கல்வியும் அவ்விதமே தான்.

அழியாமல் நம்மிடம் என்றும் நிலைத்து நிற்கும்.

அதனால்தான் கல்விக்கு அதிபதியான சரசுவதி தாமரை மலரில் அமர்ந்து இருக்கிறாள்.