ஆன்மிக களஞ்சியம்

சனிக்கிழமை தோறும் சிறப்பு அபிஷேகம்

ரங்கநாயகி தாயாருக்கு தினமும் அபிஷேகம் நடைபெறும். இதில் பெண்கள் அதிக அளவில் பங்கேற்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

மாலை மலர்

ஆதி திருவரங்கம் ஆலயத் தில் தினமும் 2 கால பூஜை நடத்தப்படுகிறது.

காலை 7 மணி முதல் 8.30 மணிக்குள் முதல் பூஜை நடத்தப்படும்.

பிறகு மாலை 6.30 மணி முதல் 7.30 மணிக்குள் 2&வது பூஜை நடைபெறும்.

மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட மாட்டாது.

மூலவர் சிலை மூலிகை மற்றும் சுதையால் செய்யப்பட்டு இருப்பதால் அபிஷேகம் செய்யப்படுவதில்லை.

அதற்கு பதில் சந்தனகாப்பு செய்யப்படுகிறது.

உற்சவருக்கு தினமும் அபிஷேகம் செய்யப்படும்.

சனிக்கிழமை தோறும் சிறப்பாக அந்த அபிஷேகத்தை நடத்துவார்கள்.

அன்று காலை 8 மணிக்கு தொடங்கி அனைத்து அபிஷேகங்களையும் செய்வார்கள்.

பக்தர்களும் இந்த சிறப்பு பூஜையில் பங்கேற்கலாம்.

ரங்கநாயகி தாயாருக்கு தினமும் அபிஷேகம் நடைபெறும்.

இதில் பெண்கள் அதிக அளவில் பங்கேற்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந்த அபிஷேக தரிசனத்தை செய்தால் பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கையாக உள்ளது.