ஆன்மிக களஞ்சியம்

சக்கரத்தாழ்வார் பின்னால் நரசிம்மர் இருப்பது ஏன் ?

தாயின் கருவில் இருந்து வராததால், இந்த அவதாரத்தை ‘அவசரத் திருக்கோலம்‘ என்பர். ‘நாளை என்பது நரசிம்மனுக்கு கிடையாது’ என்று குறிப்பிடுவர்.

மாலை மலர்

திருமாலின் கையிலுள்ள சக்கரத்தை 'சக்கரத்தாழ்வார்' என்பர். பக்தர்களின் துன்பம் தீர்க்க திருமாலால் ஏவப்படும் ஆயுதம் இது.

சக்கரத்தை வழிபட்டால் துன்பம் உடனடியாக நீங்கும் என்பது ஐதீகம். பக்தனான பிரகலாதனைக் காக்க திருமால் நரசிம்மராக அவதரித்தார்.

தாயின் கருவில் இருந்து வராததால், இந்த அவதாரத்தை 'அவசரத் திருக்கோலம்' என்பர்.

'நாளை என்பது நரசிம்மனுக்கு கிடையாது' என்று குறிப்பிடுவர்.

துன்பத்தில் இருந்து விடுபட்டு உடனடியாக நற்பலன் உண்டாக சக்கரத்தையும், நரசிம்மரையும் ஒருசேர வழிபடுவது சிறப்பு.

இதன் அடிப்படையில் கோவில்களில் சக்கரத்தாழ்வாரையும், நரசிம்மரையும் முன்னும் பின்னுமாக வைத்து சன்னிதி எழுப்புவர்.