ஆன்மிக களஞ்சியம்

பாஸ்போர்ட் பிள்ளையார்

திருவாரூரில் கமலாலயத் தீர்த்தக் குளத்தின் கீழக்கரையில் அமர்ந்துள்ள பிள்ளையார் இங்க் பிள்ளையார் என்று அழைக்கப்படுகின்றார்.பிள்ளையார்பட்டியில் கற்பக விநாயகருக்கு வெளிய மருத மரத்தடியில் வீற்றிருப்பவர் பாஸ்போர்ட் விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.

மாலை மலர்

இங்க் பிள்ளையார்

திருவாரூரில் கமலாலயத் தீர்த்தக் குளத்தின் கீழக்கரையில் அமர்ந்துள்ள பிள்ளையார் இங்க் பிள்ளையார் என்று அழைக்கப்படுகின்றார்.

தேர்வுக்கு செல்லும் மாணவர்கள் இந்த பிள்ளையார் முன் பிரார்த்தனை செய்தவாறு இங்கை (மையை) விநாயகர் மீது உதறி விட்டு சென்றால் தேர்வில் எளிதில் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கை நிலவி வருகின்றது.

பாஸ்போர்ட் பிள்ளையார்

பிள்ளையார்பட்டியில் கற்பக விநாயகருக்கு வெளிய மருத மரத்தடியில் வீற்றிருப்பவர் பாஸ்போர்ட் விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.

வெளிநாடு செல்பவர்கள் பாஸ்போர்ட் வைத்து அவரை வேண்டினால் சீக்கிரம் வெளிநாடு செல்லும் வாய்ப்புக் கிடைப்பதனால் அவருக்கு இப்பெயர் ஏற்பட்டது.