ஆன்மிக களஞ்சியம்

பஞ்ச முக ஷேத்திரம்

ஈசானம், தத்புருஷம், வாமதேவம், சத் யோஜதம், அகோரம் ஆகியவை ஈசனின் 5 முகங்களை குறிக்கும். ராமகிரி கால பைரவர் ஆலயம் ஈசனின் பஞ்சமுக ஷேத்திரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

மாலை மலர்

சிவபெருமான் 5 முகங்களை கொண்டவர்.

ஈசானம், தத்புருஷம், வாமதேவம், சத் யோஜதம், அகோரம் ஆகியவை ஈசனின் 5 முகங்களை குறிக்கும்.

ராமகிரி கால பைரவர் ஆலயம் ஈசனின் பஞ்சமுக ஷேத்திரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

அதன்படி ஈசான முகம், ராமகிரி வா லீஸ் வரரை பிரபலிக்கிறது.

சுருட்டப்பள்ளியில் உள்ள பள்ளிக் கொண்டீஸ்வரர் தத் புருஷ முகமாகவும், பெரியபாளையம் அருகே உள்ள ஆரணி சம்பங்கி ராமேஸ்வரர் வாமதேவ முகமாகவும் அரிய துறையில் உள்ள வர மூர்த்தி சத்யோஜத முகமாகவும் மீஞ்சூர் அருகே காட்டூரில் உள்ள சிந்தா மணீஸ்வரர் அகோர முகமாகவும் கருதப்படுகிறார்.

இந்த 5 முகங்களையும் கொண்ட 5 ஆலையங்களையும் ஒரே நாளில் தரிசனம் செய்வது நல்லது என்று பக்தர்கள் மத்தியில் நம்பிக்கை உள்ளது.