சிவபெருமான் பராசர முனிவருக்கு முக்தி தாண்டவம் ஆடி நீங்கியருளியத் தலம்.
பிரம்மனுக்கு திருமண காட்சி தந்தத்தலம்.
அக்னிக்கு உண்டான சோகை நோயை தீர்த்த தலம், சந்திரனின் சாபம் நீங்கியத் தலமாகவும் உள்ளது.
அது மட்டுமின்றி கம்சன் என்னும் மன்னனின் உடற்பிணி நீக்கிய தலம்.
கலிக்காமருக்கு திருமணம் நடந்தத் தலம்.
மானக்கஞ்சாரர் அவதரித்து வழிபட்டத் தலம்.
மேலும் பஞ்சாட்சர மகிமையை வெளிப்படுத்திய ஹரதத்தர் அவதார தலம்.
வடக்கு நோக்கி ஓடும் காவிரிக் கரையில் அமைந்த தலம்
என பல புராண வரலாறுகளை தன்னகத்தே கொண்டது.