ஆன்மிக களஞ்சியம்

ஒன்பது கோள்களின் சுருக்கமான வரலாறு - சூரியன் (ஞாயிறு பகவான்)

சூரியனுக்கு சஞ்சிகை, சாயாதேவி, சரூசினி போன்ற மனைவியர் பலர் உண்டு எனப் புராணங்கள் கூறுகின்றன.

மாலை மலர்

சூரியனுக்கு சஞ்சிகை, சாயாதேவி, சரூசினி போன்ற மனைவியர் பலர் உண்டு எனப் புராணங்கள் கூறுகின்றன.

யமன், யமுனை, அசுவினிதேவர்கள், சனி, பத்திரை, பிருகு, வால்மீகர், கர்ணன், சுக்ரீவன் போன்ற புதல்வர்கள் உண்டு.

சூரியன் வழிபட்ட சிவாலயங்கள்:

பரிதி நியமம்,

வைதீஸ்வரன் கோவில்,

தலை ஞாயிறு மயேந்திரப்பள்ளி,

மாந்துறை,

மங்கலக்குடி,

குடவாசல்,

நெல்லிக்கா,

ஆடானை,

கண்டியூர்,

சோற்றுத்துறை,

மீயச்சூர்,

மேலைத் திருக்காட்டுப்பள்ளி,

திருச்சுழியல்,

வலிவலம்,

தேவூர்,

வாய்மூர்,

திருப்புனவாயில்,

நன்னிலம்,

பூந்துருத்தி,

காஞ்சீபுரம்,

கேதாரம்

உள்பட இன்னும் பல சிவாலயங்களில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் சிவபெருமானை வழிபட்டு கிரகபதமும், ஆயிரம் கிரணங்களோடு விளங்கும் பேற்றினையும் பெற்றான்.

சூரியன் சிவபெருமானது வலது கண்ணாகவும் திகழ்பவன்.