ஆன்மிக களஞ்சியம்

நோய் தீர்க்கும் புற்று மண்

சைவ வைணவ ஒற்றுமையை காட்டும் வகையில் இறைவன் இங்கு சங்கர நாராயணனாக காட்சி தருகிறார். இத்தலத்தின் பிரார்த்தனை தெய்வமாக கோமதி அம்மன் விளங்குகிறாள்.

மாலை மலர்

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் சங்கர நாராயணசாமி கோவில் அமைந்துள்ளது.

சைவ வைணவ ஒற்றுமையை காட்டும் வகையில் இறைவன் இங்கு சங்கர நாராயணனாக காட்சி தருகிறார்.

இத்தலத்தின் பிரார்த்தனை தெய்வமாக கோமதி அம்மன் விளங்குகிறாள்.

வடக்கு திருச்சுற்றில் ஒரு பள்ளம் காணப்படுகிறது.

அந்த பள்ளத்தில் இருக்கும் புற்று மண்ணை நீரில் குழைத்து நெற்றியில் தரித்துக் கொண்டால் தீராத நோய்கள் எல்லாம் தீர்த்துவிடும் என்கிற நம்பிக்கை பக்தர்களிடம் உள்ளது.

இப்புற்று மண்ணை நீரில் குழைத்து நெற்றியில் பூசுவது மட்டுமின்றி நீரில் கரைத்து குடித்து விடுபவர்களும் உண்டு.