ஆன்மிக களஞ்சியம்

நவராத்திரி நான்காம் நாள்

பவளம் போன்ற சிவந்த நிறத்தையுடையவள்.தாமரை ஆசனத்தில் அமர்ந்து சகல ஐஸ்வரியங்களையும் தரும் அன்னையாவாள்.

மாலை மலர்

நவராத்திரி நான்காம் நாள் அன்னையை மகாலட்சுமியாக வழிபட வேண்டும்.

கையில் ஜெபமாலை, கோடரி, கதை, அம்பு வில், கத்தி, கேடயம், சூலம், பாசம், தண்டாயுதம், சக்தி ஆயுதம், வஜ்ராயுதம், சங்கு, சக்கரம், மணி, மதுக்கலயம், தாமரை, கமண்டலம் ஆகியவற்றைக் கொண்டிருப்பவள்.

விஷ்ணு பத்தினியாவாள்.

பவளம் போன்ற சிவந்த நிறத்தையுடையவள்.

தாமரை ஆசனத்தில் அமர்ந்து சகல ஐஸ்வரியங்களையும் தரும் அன்னையாவாள்.

நான்காம் நாள் நைவேத்தியம்:- கற்கண்டு சாதம்.