ஆன்மிக களஞ்சியம்

நவராத்திரி ஆறாம் நாள்

ஆயிரம் கண்ணுடையவள். யானை வாகனம் கொண்டவள்.தேவலோகத்தை பரிபாலனம் செய்பவளும் இவளேயாகும்.

மாலை மலர்

நவராத்திரி ஆறாம் நாள் சக்தித்தாயை இந்திராணியாக வழிபட வேண்டும்.

இவளை மாஹேந்தரி, சாம்ராஜ தாயினி என்றும் அழைப்பர்.

இவள் இந்திரனின் சக்தி ஆவாள்.

கிரீடம் தரித்து வஜ்ராயுதம் ஏந்தியவள்.

ஆயிரம் கண்ணுடையவள். யானை வாகனம் கொண்டவள்.

விருத்திராசுரனை அழித்தவள்.

தேவலோகத்தை பரிபாலனம் செய்பவளும் இவளேயாகும்.

பெரிய பெரிய பதவிகளை அடைய விரும்புபவர்களிற்கு இவளின் அருட்பார்வை வேண்டும்.

ஆறாம் நாள் நைவேத்தியம்:- வெண்பொங்கல்.