ஆன்மிக களஞ்சியம்

நவக்கிரகம் பெற்ற அனுக்கிரகம்

வழிபாட்டின் முடிவு நேரத்தில் பிராண நாதரும், மங்கல நாயகியும் நவநாயகர்களுக்குக் காட்சி கொடுத்தனர். பிராணநாதரை அணுதினமும் வழிபட்டனர்.

மாலை மலர்

தங்கள் உடம்பில் இருந்த தொழுநோய் பாதிக்குமேல் குணமாகி இருப்பது கண்டு வியந்தனர்.

பிராணநாதரை அணுதினமும் வழிபட்டனர்.

வழிபாட்டின் முடிவு நேரத்தில் பிராண நாதரும், மங்கல நாயகியும் நவநாயகர்களுக்குக் காட்சி கொடுத்தனர்.

பிராண நாதர் நவநாயகர்களை நோக்கி, "நவக்கிரகர்களே உம்முடைய தவத்துக்கு மகிழ்ந்தோம்.

உம்முடைய தொழுநோய் இந்நேரத்துடன் முற்றும் நீங்கும்.

இந்த அர்க்க வனத்தின் வடகிழக்கில் நீங்கள் தங்கித் தவம் செய்த இடத்தில் உங்களுக்கு எனத் தனி ஆலயம் உண்டாகி அது உங்களுக்கு உரிய தலமாக விளங்கட்டும்.

அங்கே வந்து உங்களை வழிபடுவோருக்கு நீங்கள் சுதந்திரமாக அனுக்கிரகம் செய்ய வரம் தந்தோம்" என்று கூறி மறைந்தருளினார்.