ஆன்மிக களஞ்சியம்

முருகனுக்கு விருப்பமான ஆடிக்கிருத்திகை

இந்த மூன்றும் தமிழ்க்கடவுள் முருகப் பெருமானுக்கு உகந்த நாட்களாகும். பெண்கள் விரதம் இருந்து முருகனை வழிபடுவதால் வேண்டிய வரங்கள் கிடைக்கும்.

வருடத்தில் மூன்று கார்த்திகை தினங்கள் அதிக முக்கியத்துவம் பெறும். அவை:

தை மாதம் வரும் தை கிருத்திகை,

கார்த்திகை மாதம் வரும் பெரிய கிருத்திகை

மற்றும் ஆடி மாதத்தில் வரும் ஆடிக் கிருத்திகை

இந்த மூன்றும் தமிழ்க்கடவுள் முருகப் பெருமானுக்கு உகந்த நாட்களாகும்.

ஆடிக்கிருத்திகை தினத்தன்று பெண்கள் விரதம் இருந்து முருகனை வழிபடுவதால் வேண்டிய வரங்கள் கிடைக்கும்.

ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு விரதம் இருக்கும் முருக பக்தர்கள், அன்று

புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, முருகனை வழிபடுவார்கள்.

குறிப்பாக பழநியில், பக்தர்கள் சண்முகா நதியில் நீராடி முருகனை வணங்கி, தங்களின் விரதத்தை பூர்த்தி செய்வார்கள்.