ஆன்மிக களஞ்சியம்

முன்னோர்கள் தெரிந்து கொண்ட மந்திர ரகசியம்

சுவாமிகளின் மூல மந்திரத்தை மீண்டும், மீண்டும் சொல்லும் போது, முதலில் நமது மனது திடப்படும். பிறகு அந்த மந்திர ஒலிகள் இடையூறுகளை விலக்கி, இனிய பாதைக்கு உங்களை அழைத்து செல்லும்.

மாலை மலர்

மனம் + திரம் = மந்திரம். மனதுக்கு திடம் கொடுப்பதுதான் மந்திரம்.

சுவாமிகளின் மூல மந்திரத்தை மீண்டும், மீண்டும் சொல்லும் போது, முதலில் நமது மனது திடப்படும்.

பிறகு அந்த மந்திர ஒலிகள் இடையூறுகளை விலக்கி, இனிய பாதைக்கு உங்களை அழைத்து செல்லும்.

இந்த உண்மையை நம் முன்னோர்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெரிந்து கொண்டனர்.

சரியான மந்திரங்களை உச்சரித்து பலன் பெற்றனர்.

மந்திரங்கள் பல கோடி உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த மந்திரங்கள் சித்தர்களாலும், மகான்களாலும் இறைவனிடம் இருந்து வரங்களாக பெறப்பட்டவையாகும்.