ஆன்மிக களஞ்சியம்

மாதொரு பாகன் (அர்த்தநாரீஸ்வரர்)

இவற்றில் சிவன் என்பது ஆண் வடிவம் எனவும், தாயுமானவன் என்பது பெண் வடிவம். அர்த்தநாரீவரர் என்பது ஆண்பெண் கலந்த அலி வடிவம்.

மாலை மலர்

அர்த்தநாரீஸ்வரன் என்பதற்கு தன் உடலில் பாதி பெண்ணுருவாகிய இறைவன் என்று பொருள்.

தூயதமிழில் பெண்ணொரு பாகன். மாது பாதியின், தோடுடைய செவியன், அம்மையப்பன் என்று அழைக்கப்படுகிறார்.

இது பரம்பொருளை சுட்டிக்காட்ட முடியாத அலிவடிவம் என்று கூடச் சொல்லலாம்.

இன்னது என அறிய முடியாத பிறப்பு வளர்ப்பைத் கடந்த சிறந்ததான தூய செம்பொருளே பரமசிவம்.

பரமாத்மா, ஜிவாத்மா போன்ற ஆன்மாக்களது நன்மைக்காக பல வடிவங்களில் வெளிப்பட்டு அருள்கின்றது.

இவற்றில் சிவன் என்பது ஆண் வடிவம் எனவும், தாயுமானவன் என்பது பெண் வடிவம்.

அர்த்தநாரீவரர் என்பது ஆண்பெண் கலந்த அலி வடிவம்.

லிங்கம் என்பது அங்கமே இல்லாத அரும் பொருள் வடிவம் என்று அழைக்கப்படுகிறது.