திருக்கழுக்குன்றத்தில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை, திருக்கோவில் வளாகங்களிலும்,
மலைப்படிகளிலும், குளப்படிகளிலும், மற்ற இடங்களிலும் ஒரு லட்சம் அகல் விளக்குகள் ஏற்றப்படும்.
இதேபோல் சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில் வைகாசி பவுர்ணமியன்று லட்சதீபம் ஏற்றப்படுகிறது.
மற்றும் கேரளாவில் திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி ஆலயத்திலும், குருவாயூர் ஆலயத்திலும் லட்ச தீபம் ஏற்றப்படுகிறது.
அதற்கான அகவல்கள் அந்த ஆலயங்களில் நிரந்தரமாகவே பொருத்தப்பட்டுள்ளன.