ஆன்மிக களஞ்சியம்

குடிபழக்கத்தை போக்கும் வாலீஸ்வரர்!

இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான இந்த கோவில் சோழர்களால் உருவாக்கி பராமரிக்கப்பட்டது. இது வாலி ஈஸ்வரனை வணங்கிய தலம்.

மாலை மலர்

குடிபழக்கத்தை போக்கும் வாலீஸ்வரர்

மயிலாப்பூரில் அமைந்துள்ள ஏழு ஈஸ்வர ஆலயங்களில் ஒன்று வாலீஸ்வரர் கோவில்.

இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான இந்த கோவில் சோழர்களால் உருவாக்கி பராமரிக்கப்பட்டது.

இது வாலி ஈஸ்வரனை வணங்கிய தலம்.

வாலி மாவீரனாக உருவெடுத்ததும், உயிருடன் இருக்கும் வரை செல்வபுரியான கிஷ்கிந்தாவை அரசாண்டவன் என்ற அருள் பெற்றதும் இங்கு தான்.

இங்கு கருவறை வாசல் கிழக்கு பார்த்து இருந்தாலும், வடக்கு பக்கமே சுற்றுச்சுவர் வாசல் உள்ளது.

இதை குபேர வாசல் என்கிறார்கள். ஏனெனில் வாலி வடதிசை பார்த்தே தவமிருக்கிறான்.

இங்கு வட கிழக்கில் பஞ்சலிங்கமும் உண்டு.

இங்கு அமைதியாய், தனியே அமர்ந்து, உள்ளுக்குள் ஆழ்நிலை தியானம் செய்தால் இங்கு குடியிருக்கும் சூட்சும சக்தியை அறிய முடியும்.

அஷ்டமி அன்று பஞ்சலிங்கத்திற்கு சாம்பிராணி தூபம் போட, குடிப்பழக்கம் மறக்கப்படும். மாதுளம்பழ அபிஷேகம் செய்தால் செல்வம் சேரும்.