தேவகோட்டையில் கலங்காத விநாயகர் உள்ளார். ஆவணி அமாவாசை உத்திர நட்சத்திரம் அன்று இவர் வீதி உலா வருவதைக்காணலாம்.
முன்பு, போருக்குச் செல்லும் அரசர்கள், இந்த விநாய கரை வணங்கி பூஜை செய்துவிட்டுதான் போருக்கு புறப்பட்டுப் போவார்கள்.
பாஞ்சாலங்குறிச்சியை ஆண்ட கட்டபொம்மன் இந்த விநாயகரை வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.
நீதிமன்றத்தில் வழக்குத்தொடர விரும்புபவரும் வழக்கில் வெற்றிபெற விரும்புபவரும் இவ்விநாயகரைத் தரிசனம் செய்து வேண்டிக்கொள்வதைக் காணலாம்.
இவரை பூஜித்து செல்பவர்கள் ஒருபோதும் தோல்வியைக் கண்டதில்லை என்கின்றனர்.