ஆன்மிக களஞ்சியம்

கம்பத்திளையனார்! கோபுரத்திளையனார்!

இந்த இரண்டு முருகனின் தரிசனமும் இங்கு மிகவும் விசேஷம்.முருகன், இங்குள்ள 16 கால் மண்டபத்தின் ஒரு தூணில் காட்சி தந்தார்.

மாலை மலர்

சம்பந்தாண்டான் என்னும் புலவன், அருணகிரியாரிடம் முருகனை நேரில் காட்டும்படி சொல்லி அவரது பக்தியை இகழ்ந்தான்.

அருணகிரியார் முருகனை வேண்டவே அவர் இங்குள்ள 16 கால் மண்டபத்தின் ஒரு தூணில் காட்சி தந்தார்.

இதனால் இவர், "கம்பத்திளையானார்" என்று பெயர் பெற்றார்.

இச்சன்னதிக்கு பின்புறம் மண்டபம் இருக்கிறது.

இங்குள்ள வல்லாள மகாராஜா கோபுரத்தின் அடியில் "கோபுரத்திளையனார்" என்ற பெயரிலும் முருகன் காட்சி தருகிறார்.

அருகில் அருணகிரிநாதர் வணங்கியபடி இருக்கிறார்.

அருணகிரியார் இங்குள்ள கோபுரத்திலிருந்து விழுந்து உயிர்விட முயன்றபோது, அவரைக் காப்பாற்றி திருப்புகழ் பாட அருளியவர் இவர்.

இந்த இரண்டு முருகனின் தரிசனமும் இங்கு மிகவும் விசேஷம்.