ஆன்மிக களஞ்சியம்

காமதேனு வாகனம்

தன்னலம் கருதாது பலனைக் தரும் தன்மை பெற்றது காமதேனு. வாகனங்களுக்குரிய இந்த சிறப்புகள் அனைத்தும் திருவண்ணாமலையில் இருந்தே தோன்றியதாக கூறுகிறார்கள்.

தன்னலம் கருதாது பலனைக் தரும் தன்மை பெற்றது காமதேனு.

இறைவியும் தன்னலமின்றிப் பக்தர்களுக்கு அருளும் தன்மை பெற்றுள்ளதால் காமதேனு வாகனம் பயன்படுத்தப்படுகின்றது.

தீபத் திருவிழாவின் மூன்றாம் நாள் ஸ்ரீ அண்ணாமலையார் சிம்ம வாகனத்தில் வருவதன் உட்பொருள் தற்பெருமையும்,

சினத்தையும், அகங்காரத்தையும் அடக்கி தன்னடக்கம், சாந்தம், பணிவு, அன்பு, பக்தி முதலிய

நற்குணங்களைக் கொள்வோர் அருள்மிகு ஸ்ரீ அருணாசலேசுவரர் திருவருளுக்குப் பாத்திரமாவார்கள் என்பதே ஆகும்.

ஸ்ரீ பராசக்தி அம்பிகை அன்ன வாகனத்தில் வருவது, அன்னபட்சி பாலுடன் கலந்த நீரை நீக்கிப் பாலை மட்டும்

பருகுவது போல் தீய செயல்களை நீக்கி நற்செயல்களைப் புரிந்து நல்லவற்றையே சிந்தித்து வரும்

புண்ணிய சீலர்களுக்கு எங்கும் நிறைந்திருக்கும் பராபரியின் (ஸ்ரீ அன்னை பராசக்தி) திருவருள்

உடனிருந்து துணைபுரியும் என்பதனை உணர்த்த ஸ்ரீஅம்மன் (ஸ்ரீ உண்ணாமலை அம்மன்) அன்ன வாகனத்தின்

மேல் எழுந்தருளிப் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றாள்.

வாகனங்களுக்குரிய இந்த சிறப்புகள் அனைத்தும் திருவண்ணாமலை தலத்தில் இருந்தே தோன்றியதாக சொல்கிறார்கள்.

அது போல நவராத்திரி உருவான சிறப்பும் திருவண்ணாமலை தலத்துக்கே உண்டு.

SCROLL FOR NEXT