கிழக்கு கோபுரம் வழியாக நடராஜர் ஆலயத்திற்கு செல்லும் பாதையான 21 படிகள் என்னும் வாயிலைக் கடந்தால்,
முதலில் வருவது, தண்டாயுதபாணி சன்னிதி அமைந்த குலோத்துங்க சோழன் திருமாளிகை பிரகாரம் வரும்.
அங்கு, வலம் வரும் முன், நாம் முதலில் தரிசிக்க வேண்டியது மாம்பழ விநாயகரைத் தான்.
கையில் மாம்பழம் ஏந்திய கோலத்தில் அழகிய உருவில் விநாயகப் பெருமான் அமைந்திருப்பார்.
அவரை தரிசித்து, பிரகாரம் வலம் வந்தால் கொடி மரம்
அதன் அருகே பால தண்டாயுதபாணி சன்னிதி
பிறகு பிரகார வலம் முடித்து, நடராஜரை தரிசிக்கச் செல்ல வேண்டும் என்பது மரபு.